Friday 8 January 2021

 இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...

(இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)


.பயனுள்ள பதிவு தவறாமல் படிக்கவும்...


உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.


நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.


உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.


ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....


ஒவ்வொரு மனிதனும்

தனித்தனி ஜென்மங்கள்.

தனித்தனி பிறவிகள்

தனித்தனி ஆன்மாக்கள்


அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .


அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.


இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.


அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.


அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. 


எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?


ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.


அவர்களுக்கு அனுபவம் தான் குரு.


அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.


செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.


நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது. 


எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்க்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.


நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.


இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.


உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்


நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.


மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.


உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்...அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.


தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 

ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.


இப்பதிவை பத்திரப்படுத்தி , உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பொறுமையாக மீண்டும் ஒருமுறை படிக்கவும்... 

நன்றி.

மகிழ்வித்து மகிழ்

Tuesday 29 September 2020

 கடமை எனும் கர்மாவினை பிரதிபலன் எதிர்பாராது செய்பவர் எவரோ அவரையே கர்மபலன் வந்தடைகிறது. இதை அறிய நெடுங்காலம் ஆகி விடுகிறது வாழ்க்கை பாதையில்.

சிந்தித்து செயலாற்றுங்கள்

 நல்லதே நடக்கும். இங்கு வருத்தமோ கலக்கமோ நமக்கு பயனை அளிக்காது. இருந்தாலும் மனம் ஏனோ அதை ஏற்க மறுக்கிறது.

சிந்தித்து செயலாற்றுங்கள்

Monday 21 September 2020

 பிறரை மகிழ்வித்து 

வாழ்வோம் மகிழ்வுடன்!


மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.


 அந்த நேரத்தில், 

ஒரு மனிதன் தனது ஒன்பது முதல் பத்து வயது மகளுடன் வந்து முன் மேஜை முன்பு அமர்ந்தார்.


 அவரது சட்டை சேறும் சகதியுமாக இருந்தது, முதல் இரண்டு பொத்தான்கள் காணவில்லை. 


 சாலையில்  

வேலை செய்யும் 

ஒரு தொழிலாளி போல் இருந்தது, 


சிறுமியின் ஃபிராக் கழுவப்பட்டுச் சுத்தமாக இருந்தது, அவள் தலைமுடியை எண்ணெயிட்டுச் சுத்தமாக வைத்திருந்தாள்.


 அவள் முகத்தில் 

ஒரு மகிழ்ச்சி தோன்றியது.  ஹோட்டலின் 

முழு அழகையும் 

அவள் ரசிப்பதை நாங்கள் கவனித்தோம். 


 மேலே இருந்து குளிர்ந்த காற்றை வழங்கிய விசிறியின் மீது அவள் கண்கள் ஒரு கணம் ஓய்வெடுத்தன.


 குஷன் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சற்று எழுந்து அவள் அதை ரசிப்பதைக் கண்டோம்.


 பணியாளர் 

இரண்டு பெரிய  

 கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீரை அவர்கள் முன்பு வைத்தார்.


 அவர், தனது மகளுக்கு ஒரு மசாலா தோசை கூறினார்.  

அவன் அதைக் கேட்டதும், அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மீண்டும் பிரகாசமாகியது.


 உங்களுக்கு என்ன வேண்டும்?  என்று பணியாளர் கேட்டார்.


 எனக்கு எதுவும் தேவையில்லை.,

அவர் பதிலளித்தார்.


 சற்று நேரத்தில், 

சட்னி மற்றும் சாம்பருடன் ஒரு சூடான, காரமான மசால் தோசை வந்தது,


 சிறுமி தோசை சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தாள், அவர் அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே குளிர்ந்த நீரைப் பருகினார்.


 பின்னர் அவரது அலைபேசி ஒலித்தது.   

 அது பழைய மாடல்.   மறுபக்கம் அவரது நண்பர் என்று தோன்றியது.  


இன்று தனது மகளின் பிறந்த நாள் என்றும் தான் அவளுடன் ஹோட்டலில் இருப்பதாகவும் கூறினார்.


 பள்ளியில் 

முதல் இடத்தை வென்றால், 

பிறந்த நாளன்று  

 ஹோட்டலில் 

மசாலா தோசை 

வாங்கித் தருவதாக  முன்பு உறுதியளித்திருந்ததாகவும், தற்போது 

மகள் முதல் இடத்தை வென்றதால் 

இப்போது 

தனது வாக்கினை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவும்  

 கூறினார்.


 (அவர் பேசியது தெளிவாகக் கேட்டது)…


 இல்லை, நாங்கள் இருவரும் எப்படி 

சாப்பிட முடியும்?  


 என்னிடம் அவ்வளவுதான் 

பணம் இருக்கிறது?  

சில நாட்களாக எனக்கு எந்தக் குறிப்பிடத்தக்க வேலையும் இல்லை., வீட்டில் என் மனைவி தயாரித்த சாப்பாடு  உள்ளது. 

எனக்கது போதும்.


 எனக்கு முன் நிகழ்ந்த அக் காட்சியையும், உரையாடலையும் கேட்டுக் கொண்டிருந்த நான்,என் உதடுகளுக்குக் கொண்டு வந்த சூடான தேநீரில் எனது நாக்கு எரிந்தபோது அவர்களிடமிருந்து  

கண்கள் அகன்றன. 


 யாரும் பணக்காரரோ அல்லது ஏழையோ...  

 தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வர் என்பதை 

நான் உணர்ந்தேன்.


 நான் எழுந்து கவுண்டருக்குச் சென்று எங்கள் ஐஸ்கிரீம் மற்றும் தேநீருக்கான பணத்துடன் மேலும் இரண்டு மசாலா தோசைகளுக்கான பணத்தையும் கொடுத்தேன்.


 அந்தத் தந்தையையும் மகளையும் சுட்டிக்காட்டி மெதுவாகக் கடைக்காரரிடம் கூறினேன்.


 'அந்த மனிதருக்கு இன்னொரு தோசை கொடுங்கள், 

அவர் பணத்திற்குச் சொன்னால்,

' இன்று உங்கள் 

மகளின் பிறந்தநாள், அவள் பள்ளியில் 

முதல் இடத்தைப் பெற்றிருக்கிறாள், எனவே ஹோட்டல் நிர்வாகம்  உங்கள் மகளுக்குத் தரும் பரிசு இது.  


இதை இன்னும் சிறப்பாகப் படிப்பதற்கு நாம் ஊக்குவிப்பதாகக் கருத வேண்டும். 


 அவருக்கு இலவசம் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், 

அது அவரது நல்ல மனதுக்கு வேதனையைத் 

தந்து விடும். "


 ஹோட்டல் உரிமையாளர் புன்னகைத்து, 

"இந்தப் பெண்ணும் அவளுடைய தந்தையும் இன்று எங்கள் விருந்தினர்கள். அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. 


இந்தப் பணத்தை 

வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் அல்லது இது போன்ற பிற சேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்."


 பணியாளர் மற்றொரு தோசை மேசையில் வைத்தார்., 

நான் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

 சிறுமியின் தந்தை திடீரென்ற அதிர்ச்சியில் அவரிடம், "நான் 

ஒரு தோசைதான் சொன்னேன், 

எனக்கு இது தேவையில்லை" 

என்று கூறினார்.


 பின்னர் ஹோட்டல் உரிமையாளர் அருகில் சென்று, “உங்கள் மகள் பள்ளியில் 

முதல் இடத்தில் வந்ததற்கான 

எங்கள் பரிசு,

 உங்கள் இருவருக்கும், மசாலா தோசை ஹோட்டலின் இன்றைய ஸ்பெஷல். '


 தந்தையின் கண்கள் விரிந்தன, 

அவர் தனது மகளை நோக்கி, 

"பார் மகளே! 

நீ கடினமாகப் படித்தால் வாழ்க்கையில் இது போன்ற இன்னும்  பல பரிசுகளைப் பெறலாம் என்றார்."


 அவர் ஒரு பேக் பண்ண முடியுமா என்று பணியாளரிடம் கேட்டார்.  தான் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது மனைவியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், 

அதைச் சாப்பிட அவருக்கு வாய்ப்புக் கிடைக்காது என்றும் கூறினார்.


 "இல்லை,  நீங்கள் அதை இங்கேயே சாப்பிடலாம். வீட்டிற்கு  நான் இன்னும் 3 தோசையும் 

ஒரு இனிப்புப் பொதியும் பேக்செய்கிறேன்."


 இன்று நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்கள் மகளின் பிறந்தநாளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் இனிப்புகளுடனும் கொண்டாடுங்கள்,

 அவளுடைய நண்பர்களை அழையுங்கள்., 

அதில் எல்லா மிட்டாய்களும் இருக்கும். '


 இதையெல்லாம் கேட்டபோது, ​​

என் கண்களில்,  

 ஆனந்தக் கண்ணீர். 


ஒரு நல்ல செயலைச் செய்ய ஒரு சிறு முயற்சி எடுத்தாலும்,

 நம்முடன் சேர பல மனிதாபிமானமுள்ளவர்கள் உடன் முன்வருவார்கள் என்பதை உணர்ந்தேன்.


  நன்றி.

Saturday 19 September 2020

 நாம் கடவுளுக்கு படைக்கும் உணவை அவர் அருந்துகிறாரா இல்லையா? என்ற சந்தேகம் சிலர் மனதில் எழுவதுண்டு.


 அதே சந்தேகம் ஒரு சிஷ்யன் மனத்திலும் எழுந்தது. 


இதற்கான விடையை உடனே தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்த அவன், தன் குருவிடம் சென்றான்.


“குருவே, நாம் கடவுளுக்காக படைக்கும் நைவேத்யத்தை அவர் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 


இறைவன் அதை சாப்பிட்டால் நைவேதியத்தின் அளவு குறையவேண்டும் அல்லவா?


 பிறகு எப்படி அதை கடவுள் சாப்பிட்டார் என்று நம்புவது? என்று கேட்டான்.


குரு அவனை ஊடுருவி பார்த்துவிட்டு, மெளனமாக சிரித்தபடியே,


 ’நமது வேதாந்த வகுப்பிற்கு நேரமாகிவிட்டது. ஆகையால் இப்போது நீ வகுப்பறைக்கு செல் நான் சிறிது நேரத்தில் வருகிறேன்” என்றார்.


வகுப்பறையில் அன்று அனைவருக்கும் ஒரு அற்புத மந்திரத்தை பற்றி விளக்கினார்


 குரு. பிறகு அணைத்து மாணவர்களும் அதை மனதில் பதியவைக்க துவங்கினர்.


 சிறிது நேரம் கழித்து, தன்னிடம் படையலை பற்றி கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.


குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான் சிஷ்யன்.


 “எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார் குரு.


 என்றும் மறவாதபடி முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே” என்றான் சிஷ்யன். 


அப்படியா சரி, எங்கே ஒருமுறை அந்த மந்திரத்தை என்னிடம் சொல் பார்க்கலாம் என்றார்.


மனதை ஒருநிலை படுத்திகொண்டு மந்திரத்தை உச்சரிக்க ஆரமித்தான் சிஷ்யன். 


அவன் கூறி முடித்தவுடன், சிஷ்யா நீ மந்திரத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டதுபோல் தெரியவில்லையே. உன் புத்தகத்தை காட்டு பாப்போம் என்றார் குரு.


பதட்டம் அடைந்த சிஷ்யன் உடனே தன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தான்.


 நான் கூறியதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னியுங்கள் குருவே. அனால் இந்த புத்தகத்தில் உள்ளபடியே தான் நான் மந்திரத்தை கூறினேன் என்றான்.


இந்த புத்தகத்தில் இருந்து தான் மந்திரத்தை உள்வாங்கினாயா என்றார் குரு. ஆம் குருவே என்றான் சிஷ்யன்.


 அப்படியானால் நீ உள்வாங்கிய பிறகும் இதில் மந்திரம் இருக்கிறதே எப்படி? 


நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் அது இருக்க கூடாதல்லவா? என்றார் குரு. 


சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.


நீ மனதில் உள்வாங்கிய மந்திரம்  சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். 


இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். அவனுக்கு நாம் ஸ்தூல வடிவில் படைக்கும் நைவேத்யத்தை அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.


 அதனாலேயே அதன் அளவு குறைவதில்லை.


உதாரணத்திற்கு இப்போது நீ உள்வாங்கியதால் புத்தகத்தில் இருந்த மந்திரத்தின் அளவு குறையவில்லை அல்லவா அதுபோல தான் என்றார் குரு.


 இந்த அற்புத விளக்கத்தை கேட்டு சிஷ்யன் மெய் சிலிர்த்துபோனான்.

 என்ன செய்வேன்

  ஏதும் அறியவில்லையே?

                ******

   மருந்தறியேன் மணியறியேன்

மந்திரம் ஒன்றும் அறியேன்

   மதியறியேன்  விதியறியேன்

வாழ்க்கை நிலையறியேன்


     திருந்த அறியேன்

  திருவருளின் செயலறியேன்

    அறம்தான் செய்தறியேன்

  மனம் அடங்கும் திறத்தினில்

ஓரிடத்தே இருந்தறியேன்

   அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்.

      

    எந்தை பிரான் மணிமன்றம்

       எய்த அறிவேனோ...

  இருந்த திசை சொல்ல அறியேன்

     எங்ஙனம் நான் புகுவேன்.


யார்க்கு உரைப்பேன் ?

      என்ன செய்வேன்.

ஏதும் அறிந்திலேனே...?

௭ன் தெய்வமே சங்கரா🙏🙏🙏

ஹர ஹர சங்கர!!!

ஜெய ஜெய சங்கர !!!

Monday 7 September 2020

 ௭ன் தெய்வமே சங்கரா.. 

௭ங்களை செயலற்றவன்

ஆக்கிவிடாதே. 

நடை பிணமாக நின்று

நட்ட கல்லாக நின்று

விதி முடிந்த ௮ன்று 

கட்டையை விட்டு விட்டு,

 ஓடுகிற உயிராக ௭ங்கள் உயிரை

ஆக்கி விடாதே. 

யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ

௮தை நாங்கள் செய்து விடுகிறோம். 

௭ங்களை தூற்றியவர்களையும் கூட

மறந்து ௮வர்கள் நலமாக வாழ பிரார்த்தனை செய்து கொள்கின்றோம்... 

   சங்கரா ௭ங்கள் தெய்வமே

ஒளி மிகுந்த கண்களையும்

௨ற்சாக மிகுந்த ௨ள்ளத்தையும்

ஆரோக்கியமான உடலையும் ௭ங்களுக்கு கொடு. ௭ப்போதும் சுறுசுறுப்பாகவும்,கலகலப்பாகவும்

இருக்கக் கூடிய மான்குட்டியின் உடலை ௭ங்களுக்கு கொடு.

கொடிய நோயின் ௨பாதை ௭ங்களை வெறும் கூடுகளாக்கி விடாதவாறு ௭ங்களை காப்பாற்றும் ௮ய்யனே...

ஹர ஹர சங்கர🙏🙏🙏

ஜெய ஜெய சங்கர🙏🙏🙏