Sunday 29 January 2017

தீயநட்பு வேண்டவே வேண்டாம்

அறிவாளியின் நட்பு, உறவினர்களைக் காண்பதைப் போன்று
இன்பத்தை அளிக்கும். மூடர்களுடைய நட்பு பகைவனுடைய
கூட்டுறவைப் போல துன்பம் தரும்.
நல்ல அறிவும், நல்லொழுக்கமும் உடைய தீமைகளைக் களைந்து
நிதானமாக வாழ்கிற நண்பர் ஒருவர் உனக்குக் கிடைப்பாரானால்
விருப்பமோடு அவருடன் கலந்து பழகு.
எதிரிக்கும் நண்பனாய் இரு. தேவைக்கு உதவி செய்.
அறிவாளியாயும், ஒத்துப் போகக்கூடியவனாயும், அடக்கமும்,
நல்லொழுக்கமும் உடைய ஒரு தோழன் கிடைப்பானாகில் எல்லா
இடையூறுகளையும் கடந்து அவனுடன் கருத்துடனும்
மகிழ்ச்சியுடனும் நட்புக் கொள்ள வேண்டும்.
மூடனின் நட்பைப் பெறுவதனைக் காட்டிலும், ஒருவன் தனியே
வசிப்பது நல்லது. அவனது நட்பு பாவ காரியங்களைச் செய்ய
வைக்கும்.
முட்டாள்களுடன் ஒட்டி வாழ்வதைக் காட்டிலும் தனிமையாய்
வாழ்வதே சிறந்தது. மடையர்களின் நட்பில் வாழ்பவர் அதிக
காலம் துன்புறுவார்கள். மடையர்கள் நட்பு எதிராளியின் நட்பை
விட மிகுந்த வேதனை அளிக்கும். தீய நட்பும், வீணருடன்
உறவும் வேண்டாம். நல்லாரோடு இயங்கிப் பெரியோரைத்
துணைக்கொள்.
உங்களுக்கு உபதேசிக்கப்பட்டுள்ளது என்பதற்காகவோ,
சம்பிரதாயமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதாலோ, உங்கள்
கற்பனையே ஒட்டியது என்பதாலோ எதையும் நம்பாதீர்கள். குரு
போதிப்பதை நீங்கள் அவரிடம் கொண்டுள்ள மதிப்பின் காரணமாக
மட்டும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். எந்தச் செயலையும் நன்கு
ஆராய்ந்து எது எல்லாப் பிறவிகளின் நன்மைக்கும், நலனுக்கும்
உகந்தது நல்லது என்று தெரிந்தால், அதை உறுதியாய்
கடைப்பிடியுங்கள்.