Friday 11 November 2016

வெற்றியின் ரகசியம்


நோக்கம் எதுவென்பதை முதலில்  தீர்மானி .
அதுவே  இலக்கு  என்பதை உறுதி செய்துகொள்.
கையில் பணமில்லையே ... உடலில் வலுவில்லையே...
உதவி செய்ய நண்பர்கள் இல்லையே ...
என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே.
எதற்கும் பயப்படாதே ... தயங்காதே...!
இலக்கை நோக்கி அடியெடுத்து வை.
தொடர்ந்து முன்னேறு.
சோதனைகள் விலகும் . பாதை தெளிவாகும்.
நோக்கத்தை அடைந்தே தீருவாய்.
அதை யாராலும் தடுக்க முடியாது.

நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
​​

நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

மனதிற்கு அடிமையாகும் மனிதன் மிருகமாகிறான் அதே மனம் மனிதனுக்கு அடிமையாகும் போது அவனே தெய்வமாகிறான்

  மனமும் மனதின் என்ணுகளுமே எல்லா செயல்களுக்கும் காரணமாக அமைகின்றன

மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன்

ஆதலால் உங்கள் மனமாகிய கோவிலில் எண்ணமாகிய கடவுளை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள் நல்லவற்றையே சிந்தனை செய்யுங்கள்

நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் 


திருவினை வென்று வாழ்!


நற்செயல்களை செய் அதற்கான பலனை எதிர்பார்க்காதே அதன் பலன் எந்த வழியிலும் உன்னை வந்து சேரும் என்றென்றும் உன் பெயரை நிலைத்து நிற்க செய்யும்


உங்கள் மனச்சாட்சிக்கு நீங்கள் உண்மையுள்ளவராக இருந்தால் உங்கள் வாழ்வில் உங்களைப் போல சந்தோஷமான மனிதன் வேறு யாரும் கிடையாது


பொறாமை என்பது அடிமைகளின் சாபக்கேடு அதை எப்போதும் தவிர்த்திடுங்கள் எல்லா ஆசிகளும் வெற்றிகளும் உங்களை வந்தடையும்


நல்லது அல்லது கேட்டது என்று எதுவும் இல்லை நமது எண்ணமே ஒரு விஷயத்தை அவ்வாறு மாற்றுகின்றது


நிச்சயம் நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்