Monday, 7 September 2020

 ௭ன் தெய்வமே சங்கரா.. 

௭ங்களை செயலற்றவன்

ஆக்கிவிடாதே. 

நடை பிணமாக நின்று

நட்ட கல்லாக நின்று

விதி முடிந்த ௮ன்று 

கட்டையை விட்டு விட்டு,

 ஓடுகிற உயிராக ௭ங்கள் உயிரை

ஆக்கி விடாதே. 

யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ

௮தை நாங்கள் செய்து விடுகிறோம். 

௭ங்களை தூற்றியவர்களையும் கூட

மறந்து ௮வர்கள் நலமாக வாழ பிரார்த்தனை செய்து கொள்கின்றோம்... 

   சங்கரா ௭ங்கள் தெய்வமே

ஒளி மிகுந்த கண்களையும்

௨ற்சாக மிகுந்த ௨ள்ளத்தையும்

ஆரோக்கியமான உடலையும் ௭ங்களுக்கு கொடு. ௭ப்போதும் சுறுசுறுப்பாகவும்,கலகலப்பாகவும்

இருக்கக் கூடிய மான்குட்டியின் உடலை ௭ங்களுக்கு கொடு.

கொடிய நோயின் ௨பாதை ௭ங்களை வெறும் கூடுகளாக்கி விடாதவாறு ௭ங்களை காப்பாற்றும் ௮ய்யனே...

ஹர ஹர சங்கர🙏🙏🙏

ஜெய ஜெய சங்கர🙏🙏🙏

Wednesday, 22 April 2020



மனிதன் செய்த
செயற்கை தவறுகளுக்கு
தன்னைத் தானே
சரிசெய்து கொள்கிறது இயற்கை🧚‍♂

அசுத்தம் கொட்ட
மனிதர்கள் இல்லையே
அழுக்கு தேய்த்து
குளித்து கொண்டது கங்கைநதி🏊‍♂

கூட்டம் போட
கட்சிகள் இல்லையே
கோடம்பாக்கத்தில்
ஊர்வலம் போயின
குயில்கள்😍

கூச்சல் போடும்
வாகனம் இல்லையே
கோயம்பேட்டில்
டூயட் பாடின குருவிகள்💗

பகலெல்லாம் பிள்ளைகளை
சிரிக்க வைக்க
வடிவேலு😁

இரவெல்லாம் இதயங்களை
உறங்க வைக்க
இளையராஜா🎸

வீட்டுக்குள்ளேயே
வாழ்வது ஒன்றும்
அத்தனை கடினமில்லை

சூழலும் பம்பரத்தை
கையில் ஏந்தி காட்டி,
கோலி குண்டுகளை
குறி வைத்து அடித்து காட்டி,
காரம் தூக்கலாக
கறி குழம்பு செய்து காட்டி

'அப்பா சூப்பர் மா'
என குழந்தையிடம்
வாங்கிய பட்டம்
1000 apraisalகளுக்கு சமம்🏆

வீடு கிடக்கட்டும்
நாடு என்ன செய்கிறது?

செய்தி சேனல்களை
பலமுறை பார்த்துவிட்டேன்.
கொலை கொள்ளை கற்பழிப்பு
எதுவும் இல்லை

சட்டம் தராத பயத்தை
சாவு தானே தருகிறது🌚

தலைக்கவசம்
அணியாத மூடர்களை
முகக் கவசம் அணிய வைத்த முற்போக்குவாதி
இந்த Corona✳

இளசுகள் மூளையை கழுவி
சண்டைகள் மூட்டும்
சாதி சங்கமுட்டாள்களின்
கைகளை முதலில் கழுவ சொன்ன மருத்துவன்
இந்த Corona👨‍🔬

இந்த தேசத்தில்
இரண்டு மக்கள்தான்.

அடுத்தவேளை
சாப்பாட்டுக்கு
எதை செய்யலாம்?

அடுத்தவேளை
சாப்பாடு இல்லையே
என்ன செய்யலாம்?

பால் கொண்டு Dolgona காபி
எப்படி செய்வது?

பாலுக்கு அழும் குழந்தைக்கு
சமாதானம் எப்படி செய்வது?

இருவருக்கும் சேர்த்தே
பிறந்துள்ளது சித்திரை திருநாள்😎

இந்த நன்னாளில்
கோயில்கள்
மூடிவிட்டால்
என்ன???

தெய்வங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்
மருத்துவமனையில்👨‍⚕

சர்ச்சுகள்
மூடிவிட்டால்
என்ன???

ஒவ்வொரு தெருவையும்
காத்து நிற்கிறார் கர்த்தர்
காக்கிச் சட்டையில்⛪

பள்ளிவாசல்கள்
மூடிவிட்டால்
என்ன???

மூடப்படாத மளிகை கடையின்
ஒவ்வொரு அரிசியிலும்
ஏழைகளின் பெயரை எழுதி வைத்துள்ளான்
எல்லாம் வல்ல இறைவன்🕋

நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.

மனித இனமே
நினைவு சின்னங்களில்
மட்டும்
இல்லை கடவுள்.

குப்பை அள்ளும் கரங்களில்,
தண்ணீர் கேன்போடும் வாகனங்களில்,
விதைப்பை நிறுத்தாத
விவசாயியின் வியர்வையில்,
விலையேற்றம் செய்யாத
வியாபாரி நேர்மையில்,
குழந்தைகள் கொஞ்சும்
மொட்டை மாடியில்,
நலம் விசாரிக்கும்
நண்பனின் குரலில்❤

எங்கெல்லாம் நம்பிக்கை வேர் உள்ளதோ அங்கெல்லாம் ஆண்டவனின் பேர் உள்ளது.

இன்றோ நாளையோ
நோய்க்கு மருந்து வரும்
ஊரடங்கு முடிந்துவிடும்.

வீட்டில் இருந்து
விடுதலை அடையும் திருநாளில்
என்ன செய்வேன் நான்?

மால்களுக்கு ஓடமாட்டேன்
மந்தையாக மாற மாட்டேன்
ஆழமாய் தினம் மூச்சு எடுப்பேன்
அன்னையிடம் பேச்சுக் கொடுப்பேன்🤰

அன்றாட சுமைகளில்
மனைவிக்கு தோள் கொடுப்பேன்
மனிதகுலம் சார்பாக
மருத்துவர்களுக்கு கை கொடுப்பேன்🥰

சில்லறைகள் மட்டுமல்ல
சிரிப்புகளும் சேகரிப்பேன்
தொல்லைகள் தந்தாலும்
பிள்ளைகளை
காதலிப்பேன்👶

புத்தாண்டோ
பிறந்தநாளோ தேவையில்லை
உயிரோடு வாழ்கின்ற
ஒவ்வொரு நாளையும்
கொண்டாடுவேன்🥳

வாகனத்தில் செல்லும்போது
வீதியிலே சாமி கண்டால்
கையெடுத்து வணங்குதல் போல்

காவிரி வைகை தாமிரபரணி
நெடுஞ்சாலை நெடுக
நிரம்பிய இயற்கையை
கையெடுத்து
கும்பிடுவேன்🗻

கோடையிலும் கொஞ்சமாக
கொட்டிபோன மழையின்பின்
கையளவு மண் எடுத்து
கன்னத்தில் பூசிக் கொண்டு
கண்ணீரில் சிரித்தபடி
உரக்கச் சொல்வேன்
உலகிற்கு

"நண்பா..
வாழ நினைத்தால் வாழலாம்.

வழியா இல்லை பூமியில்?"

Saturday, 1 April 2017

கோபப்படுவதில் பயனில்லை

நீங்கள் நேர்மையாக இருந்தால் கோபப்படுவதில் பயனில்லைஒருவேளை நீங்கள் தவறாக இருந்தால் கோபப்படுவதற்கு தகுதி இல்லை

Sunday, 29 January 2017

தீயநட்பு வேண்டவே வேண்டாம்

அறிவாளியின் நட்பு, உறவினர்களைக் காண்பதைப் போன்று
இன்பத்தை அளிக்கும். மூடர்களுடைய நட்பு பகைவனுடைய
கூட்டுறவைப் போல துன்பம் தரும்.
நல்ல அறிவும், நல்லொழுக்கமும் உடைய தீமைகளைக் களைந்து
நிதானமாக வாழ்கிற நண்பர் ஒருவர் உனக்குக் கிடைப்பாரானால்
விருப்பமோடு அவருடன் கலந்து பழகு.
எதிரிக்கும் நண்பனாய் இரு. தேவைக்கு உதவி செய்.
அறிவாளியாயும், ஒத்துப் போகக்கூடியவனாயும், அடக்கமும்,
நல்லொழுக்கமும் உடைய ஒரு தோழன் கிடைப்பானாகில் எல்லா
இடையூறுகளையும் கடந்து அவனுடன் கருத்துடனும்
மகிழ்ச்சியுடனும் நட்புக் கொள்ள வேண்டும்.
மூடனின் நட்பைப் பெறுவதனைக் காட்டிலும், ஒருவன் தனியே
வசிப்பது நல்லது. அவனது நட்பு பாவ காரியங்களைச் செய்ய
வைக்கும்.
முட்டாள்களுடன் ஒட்டி வாழ்வதைக் காட்டிலும் தனிமையாய்
வாழ்வதே சிறந்தது. மடையர்களின் நட்பில் வாழ்பவர் அதிக
காலம் துன்புறுவார்கள். மடையர்கள் நட்பு எதிராளியின் நட்பை
விட மிகுந்த வேதனை அளிக்கும். தீய நட்பும், வீணருடன்
உறவும் வேண்டாம். நல்லாரோடு இயங்கிப் பெரியோரைத்
துணைக்கொள்.
உங்களுக்கு உபதேசிக்கப்பட்டுள்ளது என்பதற்காகவோ,
சம்பிரதாயமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதாலோ, உங்கள்
கற்பனையே ஒட்டியது என்பதாலோ எதையும் நம்பாதீர்கள். குரு
போதிப்பதை நீங்கள் அவரிடம் கொண்டுள்ள மதிப்பின் காரணமாக
மட்டும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். எந்தச் செயலையும் நன்கு
ஆராய்ந்து எது எல்லாப் பிறவிகளின் நன்மைக்கும், நலனுக்கும்
உகந்தது நல்லது என்று தெரிந்தால், அதை உறுதியாய்
கடைப்பிடியுங்கள்.

Friday, 11 November 2016

வெற்றியின் ரகசியம்


நோக்கம் எதுவென்பதை முதலில்  தீர்மானி .
அதுவே  இலக்கு  என்பதை உறுதி செய்துகொள்.
கையில் பணமில்லையே ... உடலில் வலுவில்லையே...
உதவி செய்ய நண்பர்கள் இல்லையே ...
என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே.
எதற்கும் பயப்படாதே ... தயங்காதே...!
இலக்கை நோக்கி அடியெடுத்து வை.
தொடர்ந்து முன்னேறு.
சோதனைகள் விலகும் . பாதை தெளிவாகும்.
நோக்கத்தை அடைந்தே தீருவாய்.
அதை யாராலும் தடுக்க முடியாது.

நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
​​

நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

மனதிற்கு அடிமையாகும் மனிதன் மிருகமாகிறான் அதே மனம் மனிதனுக்கு அடிமையாகும் போது அவனே தெய்வமாகிறான்

  மனமும் மனதின் என்ணுகளுமே எல்லா செயல்களுக்கும் காரணமாக அமைகின்றன

மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன்

ஆதலால் உங்கள் மனமாகிய கோவிலில் எண்ணமாகிய கடவுளை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள் நல்லவற்றையே சிந்தனை செய்யுங்கள்

நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் 


திருவினை வென்று வாழ்!


நற்செயல்களை செய் அதற்கான பலனை எதிர்பார்க்காதே அதன் பலன் எந்த வழியிலும் உன்னை வந்து சேரும் என்றென்றும் உன் பெயரை நிலைத்து நிற்க செய்யும்


உங்கள் மனச்சாட்சிக்கு நீங்கள் உண்மையுள்ளவராக இருந்தால் உங்கள் வாழ்வில் உங்களைப் போல சந்தோஷமான மனிதன் வேறு யாரும் கிடையாது


பொறாமை என்பது அடிமைகளின் சாபக்கேடு அதை எப்போதும் தவிர்த்திடுங்கள் எல்லா ஆசிகளும் வெற்றிகளும் உங்களை வந்தடையும்


நல்லது அல்லது கேட்டது என்று எதுவும் இல்லை நமது எண்ணமே ஒரு விஷயத்தை அவ்வாறு மாற்றுகின்றது


நிச்சயம் நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்