Sunday, 17 July 2016

மனிதனின் எண்ணத்தெளிவு:

நானொரு மாதுளைப் பழத்தின் 
இதயத்தில் வசித்து வந்தேன். 

ஒரு விதை சொன்னது, 
"ஒரு நாள் நானொரு பெரிய மரமாவேன். 
காற்று என் கிளைகளுக்கிடையில் 
ராகம் பாடும், 
கதிரவன் என் இலைகளின் மேல் 
நடனம் புரியும், 
எல்லாக் காலங்களிலும் நான் 
அழகும் வலிவும் மாறாமல் கொண்டிருப்பேன்." 

இன்னொரு விதை சொன்னது, 
"நானும் உன்னைப் போல் 
இளம்பிராயத்தினனாய் இருந்த போது 
இது போல் நினைத்ததுண்டு. 
இன்றோ 
உண்மை நிலவரம் புரிந்து வைத்துள்ளேன், 
இத்தகு நம்பிக்கைகள் வீணென்று 
கண்டுணர்ந்துள்ளேன்." 

மூன்றாவது விதையும் பேசியது, 
"வளமானதொரு எதிர்காலத்திற்கான 
நம்பிக்கைகள் எதையும் 
நமது தற்கால வாழ்வில் 
நான் காணவில்லை." 

நான்காவது விதை சொன்னது, 
"சீச்சீ..!! 
அப்படி ஒரு நல்ல எதிர்காலம் 
இல்லாமல் போகுமானால் 
எத்தனை ஏமாற்றம்? 
இதற்குத்தானா பிறப்பெடுத்தோம்?" 

ஐந்தாவது விதை சொன்னது, 
"நாம் என்னவாக இருக்கிறோம் 
என்பதே சரியாகப் புரியாத போது 
நாம் என்ன ஆவோம் 
என்பதைப் பற்றி 
ஏன் இத்தனை சர்ச்சை?" 

ஆறாவது விதை பதில் சொன்னது, 
"நாம் என்னவாக இப்போது இருக்கிறோமோ 
அதுவாகவே 
எப்போதும் இருப்போம்." 

ஏழாவது விதை சொன்னது, 
"நாம் எப்படி இருப்போம் 
என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது, 
ஆனால் அதை 
வார்த்தைகளில் விவரிக்கத் தெரியவில்லை." 

இப்படியே மேலும் 
எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, 
இன்னும் பலப்பல விதைகள் பேசின, 
கடைசியில் எல்லா விதைகளும் 
சேர்ந்து போட்ட கூச்சலில் 
எனக்கு எதுவுமே சரியாகக் கேட்கவில்லை. 

அன்றே நான் 
ஒரு ஆப்பிள் பழத்தின் இதயத்திற்கு 
இடம் மாறி விட்டேன். 
அங்கு விதைகளும் குறைவு, 
அவைகள் அதிகம் பேசுவதுமில்லை.

Friday, 15 July 2016

13. கடவுளும் சாத்தானும்


கடவுளும் சாத்தானும்
ஒரு நாள்
மலையுச்சியில் சந்தித்தனர்.

கடவுள் சொன்னார்,
"சகோதரா,
உனது நாள்
நன்றானதாக அமையட்டும்..!"

சாத்தான்
மறுமொழி ஏதும் கூறவில்லை.

கடவுள் தொடர்ந்தார்,
"ஏதேது,
நீ இன்று
மிகவும் கோபமாக இருக்கிறாய்
போலிருக்கிறதே..!"

சாத்தான் சொன்னது,
"எல்லாம்
இந்த முட்டாள் மனிதர்களால் தான்.
இப்போதெல்லாம் சில காலமாக
அவர்கள் என்னை நீயென்று
நினைத்துக் கொள்கிறார்கள்.
உன் பேர் சொல்லி என்னை அழைப்பது,
உன்னைப் போல் என்னை நடத்துவது,
சீச்சீ,
எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை..!"

கடவுள் புன்னகைத்துச் சொன்னார்,
"அதனாலென்ன சகோதரா,
சில நேரங்களில்
இந்த மனிதர்கள்
என்னைக் கூடத்தான்
நீயென்று நினைத்துக் கொள்கிறார்கள்,
உன் பேர் சொல்லி என்னை அழைத்து
சபிக்கிறார்கள்,
அதனாலெல்லாம் நான் வருந்துவதில்லை..!"

சாத்தான் சமாதானமடையாமல்
மனிதர்களின் முட்டாள்தனத்தை
நொந்து கொண்டபடி நடந்து சென்றது.

Wednesday, 13 July 2016

நம்மை முடக்கும் நங்கூரங்கள்!

உங்கள் அனைவரின் எண்ணங்களையும் சிறிது அறிந்ததால் இதனை கூறுகின்றேன் இதில் ஏதேனும் தவறாக கூறி உங்களை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும் ஆனால் நான் சொல்வது என்னவென்று ஒரு நாள்உங்கள்அனைவருக்கும்  புரியும் ...

நம்மை முடக்கும் நங்கூரங்கள்!

நாளைய பளுவை நேற்றைய பளுவோடு சேர்த்து இன்று தூக்க முயற்சிக்கும்போது பலசாலியும் தடுமாறுகிறான்!கடந்த காலத்தை விலை கொடுத்து வாங்கும் அளவு எவரும் பணக்காரர் ஆக முடியாது. நம்மை முன்னேற முடியாமல் தடுப்பது 'நம்மை கட்டுப்படுத்தும்சுயஅவநம்பிக்கை அல்லது சுயசந்தேகம்' என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.நமக்குப் பிடித்த லட்சியத்தை நோக்கி நாம் நடைபோடும்போது இடையூறுகள் குறுக்கிடுவது உறுதி. அந்த குறுக்கீடுநம்மிடம் இருந்தேவரலாமா?அதுநியாயமா?ஏற்கனவே 'முடியாது' என்று முடிவு செய்துவிட்டால் நமது எண்ணம் 'முடியும்' நோக்கத்தில் நம்மைச்செயல்பட அனுமதிக்காது. 

அதுபெரும்பாலும் நமக்குப் புரிவதில்லை. அடைத்து வைத்த அறையில் காற்று புகுமா?திறந்த அறைக்குள்தான் காற்று வரும். ஒட்டடைதூசிஉள்ள அறைக்குள் காற்று நுழைந்தாலும் அக்காற்று அசுதமாகத்தானே இருக்கும்அதுபோல நமது மனதிற்குள் உள்ள பயம்அறியாமைஅவநம்பிக்கை என்கிற தூசிஒட்டடைகளைத் துப்பரவு செய்து மனஜன்னலைவிசாலமாகத்திறந்துவைத்தால் 'முடியும்' என்கிற நேர்மறை எண்ணங்கலெனும் வசந்தம்வீசத் தொடங்கும்.இன்றே நம்மால் செய்ய முடிந்ததை ஒருபோதும் நாளை வரை தள்ளிப்போடக் கூடாது. வெற்றிக்கு இது ஒரு முக்கியமான சூத்திரம்! நேற்றைய தினம் நல்லதாக இருந்திருந்தால் மகிழ்ச்சியைத் தந்திருக்கும். கெட்டதாக இருந்திருந்தால் அனுபவத்தைத் தந்திருக்கும். நமக்கு மகிழ்ச்சிஅனுபவம் இரண்டுமே அவசியம். அப்படி இருக்கும்போது நாளைகோளை பழித்திடாமல் நம்மை முழுமையாக நம்புதல் அவசியம்.ஒன்றை நாம் புரிந்து கொள்வோம். எல்லைகளுக்குள் இருக்கிறது நமது உள்ளம். எல்லைகள் இல்லாதது உலகம். நமது வாழ்க்கை சில எல்லைகளுக்குள்தான் வாழப்படுகிறது. வரம்புக்குட்பட்ட வளங்கள்எல்லைக்குள் அடங்கிய திறமைகள்பிறரால் வகுக்கப்படும் எல்லைகள் என இப்படி எத்தனை எல்லைகள்அதனால் எத்தனை தொல்லைகள்..!நமது பௌதீகச் சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட எல்லைகள்சமூக சூழலால் வகுக்கப்பட்ட வரம்புகள்நமது திறமையில் இருக்கும் கட்டுப்பாடுகள்இதுதவிர நமக்குநாமே வகுத்துக்கொள்ளும் வரம்புகள்இப்படி எல்லாவற்றையும் கடந்துதான் வெற்றி கிடைக்கிறது. ஏமாற்றம்கோபம்வெறுப்பு என்கிற நிலைக்கு நாம் தள்ளப்படுவது இந்த வரம்புக்குள் வாழத்தெரியாததால் தான். வரம்புகளை எட்டி உதைக்கும் வீண் முயற்சியில் வாழ்நாள் முழுவதையும் கழித்து தன்னிரக்கத்தால் அழுவதை நாம் தவிர்ப்பது மிக மிக அவசியம்.சரியான முறையில் செய்யப்படும் முயற்சி, எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடும் என்பதை நினைவில் கொள்வோம். வாழ்வில் முன்னேறுவோம்!
தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று  ஹாரங்கள் 


மமஹாரம்- உங்களை பற்றிய உங்களது சுய சிந்தனை 

அகங்ஹராம் -உங்களை மற்றவர்கள் எப்படி நினைக்கவேண்டும் என்று நீங்கள் சிந்திப்பது 


அன்னியஹாரம்- மற்றவர்கள் உங்களை பற்றி சிந்திப்பது 
அதாவது உங்களை விமர்ச்சிப்பது 

​வாழ்வில் நீங்கள் உயர்வடைய வேண்டும் என்றால் அன்னியஹாரத்தை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால் போதும் ​...

Saturday, 9 July 2016

மகிழ்ச்சியான வாழ்வுக்கு வேதாத்திரி மகரிஷியின் 18 தத்துவங்கள்!
வேதாத்திரி மகரிஷி, தனது தத்துவங்கள் மூலமாக, ஆன்மிக தேடலுக்கும், அமைதியான, நிம்மதியான வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறார். இவரது ஆன்மிக தத்துவங்கள் அறிவியலையும் உள்ளடக்கி இருப்பது தனிச்சிறப்பு.
கடல் அலை எழுவதை பார்க்கிறோம். அலை என்பது நீரின் அசைவு. அலை என்னும் இயக்கத்தை நிறுத்திவிட்டால், மீதம் இருப்பது நீர் மட்டுமே. நீர் என்பதே மூலம். அலை என்பது தோற்றம். கடல் என்ற மூலத்தின் சிறப்பு நிலையே அலை. இதைப்போலவே இந்த பிரபஞ்சத்தின் இயக்கங்களை நிறுத்திவிட்டால், எஞ்சி இருப்பது இறைநிலை மட்டுமே என எளிய உதாரணத்தோடு விளக்குகிறார். அண்டவெளியே இறைவன் என்கிறார்.
மனித உறவுகள் மேம்பட  மகரிஷி கூறிய தத்துவங்கள் மிகவும் சிறப்பு மிக்கவை.
1. பேச்சிலும் நடத்தையிலும், பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையற்ற மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
2. பிரச்னைகள் ஏற்படும்போது மற்றவர்கள் முதலில் இறங்கி வர வேண்டும் என காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள். யாரையும் ஒப்பிடாதீர்கள்.
3. எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
4- புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை கூறவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
5. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
6. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
7. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.
8. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். தயக்கத்துடனும் பயத்துடனும் பேசாமலும் இருக்காதீர்கள்.
9. மற்றவர் கருத்துகளை, செயல்களை, நிகழ்ச்சிகளையும் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
10. உண்மை எதுபொய் எது  என்று விசாரிக்காமல் இங்கு கேட்டதை அங்கு சொல்வதையும் அங்கு கேட்டதை இங்கு சொல்வதையும் விடுங்கள். உங்களை நோக்கி அது ஒருநாள் திரும்பும்.
11. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதிடாதீர்கள். நீங்கள் முடியவே முடியாது என்று நினைத்ததை உலகில் ஒருவன் செய்து கொண்டிருப்பான்.
12.. உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். பிடிவாதத்தை கைவிடுங்கள்.
13.  அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். திருப்தி என்பது
எல்லாவற்றிலும் மிக முக்கியம்.
14. அர்த்தம் இல்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை
விடுங்கள்.
15. எந்த விஷயத்தையும் பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.
16. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்பதை
மனதார உணருங்கள்.
17. ‘நானே பெரியவன் நானே சிறந்தவன்என்ற அகந்தையை விடுங்கள். வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான்.
18. மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள் என்கிறார் மகரிஷி.
வாழ்க வளமுடன் என ஒருவருக்கொருவர் வாழ்த்தும்போது பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப்படுகிறது என்கிறார் மகரிஷி.